முதலாண்டு நிறைவைக் கொண்டாடும் இசைப்பா விற்கு வாழ்த்துகள்!
இசைப்பாவில் எனது பங்களிப்பு
ஒவ்வொருவர் ஒவ்வொரு விதமாக பாடல்களை ரசிப்பார்கள். நாங்கள் தும்கூரில் இருந்தபோது என்னுடன் ஆசிரியை ஆக இருந்த தோழி உமா கேளடி கண்மணி’ படத்தில் வரும் ‘நீ பாதி, நான் பாதி’ பாடலை எப்படி ரசிப்பார் தெரியுமா? அவர் சொல்வார்: ‘இந்தப் பாடலை ஜேசுதாஸ் பாடியிருக்கிறார். ‘நீ பாதி நான் பாதி கண்ணே’ என்று அந்த ‘கண்ணே’ வை அப்படியே காற்றில் ஊதி விடுவதுபோலப் பாடுவார். அது அப்படியே மிதந்து கொண்டு நிற்கும்’ இப்படிக் கூட பாடலை ரசிக்க முடியுமா என்று என்னை வியப்பில் ஆழ்த்தியவர் உமா. இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் தவறாமல் இவரை நினைத்துக் கொள்ளுவேன்.
பொதுவாக பாடல் பாடும்போது கடைசி வார்த்தையை கொஞ்சம் இழுத்தாற்போல பாடி முடிப்பார்கள். இந்தப் பாடலில் ஜேசுதாஸ் அப்படி இழுக்காமல் அந்த வார்த்தையை அப்படியே விட்டுவிடுவார். மிகத் திறமை வாய்ந்த, இசையை தன் வசம் கொண்டு வர ரொம்பவும் கடுமையாக உழைத்த ஒருவருக்கு மட்டுமே இது சாத்தியம்.
இவரைப் போலவே குரலை தன் வசப்படுத்தி, தன் பாட்டு மூலம் கேட்பவர்களை தன்வயப்படுத்தும் இன்னொரு பாடகர் நான் மிகவும் ரசிக்கும் குரலுக்கு சொந்தக்காரர் திரு ஹரிஹரன்.
இன்றைய இசைப்பாவில் நான் பகிரப்போகும் பாடல் ‘சுட்டும் விழி சுடர் தான் கண்ணம்மா’ பாடல். ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்தில் வரும் பாடல் இது. பின்னணி இசை எதுவுமில்லாமல் வெறும் சுருதி மட்டும் ஒலிக்க ஹரிஹரன் பாடியிருப்பார். பாடும் பாட்டில் பாவத்தையும் கொண்டு வருவதில் இவருக்கு நிகர் இவரே.
தொடர்ந்து படித்து பாடலை ரசிக்க : சுட்டும் விழி சுடர்தான் கண்ணம்மா
முதலாண்டு நிறைவைக் கொண்டாடும் இசைப்பா விற்கு வாழ்த்துகள்!
வாழ்த்துக்கள்.