Monthly Archives: பிப்ரவரி 2013

உங்கள் எலும்புகளின் வயது என்ன?

ranjani narayanan

 

உங்களுக்கு எலும்பு மெலிவு நோய் என்கிற ஆஸ்டியோபோரோசிஸ் வந்திருக்கிறது என்றால் உங்களைவிட உங்கள் எலும்புகளுக்கு வயதாகிவிட்டது என்று அர்த்தம்.

எலும்பு மெலிவு நோய் என்றால் என்ன?

நம் எலும்புகள் அடர்த்தி குறைந்து பலவீனமாகி விடுவதுதான் எலும்பு மெலிவு நோய். எலும்புகள் பலவீனப் படுவதால் எளிதில் உடைந்து போகக் கூடும்.

நம் எல்லோருக்குமே தெரியும் நம் எலும்புகளின் உறுதிக்கு கால்சியம் தேவை என்று. நமக்குத் தேவையான கால்சியம், மாத்திரைகள் மூலமாக அல்லது உணவுகள் மூலமாக கிடைக்க வேண்டும். கால்சியம் பற்றாக்குறை ஏற்படும்போது அல்லது போதுமான அளவு உடலுழைப்பு இல்லாத போது எலும்புகள் பலவீனப்பட்டு உடைய ஆரம்பிக்கின்றன.

பெண்களுக்கு மாத விடாய் நின்ற பிறகு கால்சியம் பற்றாக்குறை ஏற்படுகிறது. அதனால் 40 வயதுக்கு மேல் பல பெண்கள் ஆஸ்டோ கால்சியம் மாத்திரை சாப்பிட ஆரம்பிப்பார்கள்.

சில சமயங்களில் இப்படி கால்சியம் மாத்திரை சாப்பிடுவது மாரடைப்பு நோய்க்குக் காரணம் ஆகலாம் என்று மருத்துவர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள். அதிகப்படியாக கால்சியம் மாத்திரைகள் சாப்பிடுவது மாரடைப்பு நோய் வரும் வாய்ப்பை இரண்டு மடங்கு அதிகரிக்கச் செய்யும் என்று சொல்லுகிறார்கள்.

கால்சியம் மாத்திரைகள் சாப்பிடுவதால்  உடலுக்கு அதிகப்படியான கால்சியம் ஒரே நேரத்தில் கிடைக்கிறது. உடலால் ஏற்றுக்கொள்ளப் படாத  கால்சியம் டெபாசிட்டுக்களினால் மாரடைப்பு நோய் ஏற்படுகிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.

மாறாக, உணவின் மூலம் கிடைக்கும் கால்சியம் நிதானமாக உடலால் உறிஞ்சப் படுகிறது. அதனால் அது பாதுகாப்பானது. ஆனால் நாம் சாப்பிடும் உணவிலிருந்து…

View original post 207 more words

காதலர் தினம் – காதல் கதை 2

valentines day
காதல் என்பது இரு நெஞ்சங்கள் அன்பால் இணைந்து, அன்பைப் பகிர்ந்துகொள்ளும் ஒரு உணர்வு. ஒருவரையொருவர் புரிந்துகொள்ளுதல் என்பது இதன் முக்கிய அங்கம். ஒருவரையொருவர் அப்படியே குறை நிறைகளுடன் ஏற்றுக் கொள்ளுதல் அடுத்த கட்டம். குறைகளை தன் மனம் கவர்ந்தவளுக்காக அல்லது ‘வனுக்காக’ மாற்றிக் கொள்ள முயலலாம். அல்லது நிறைவை நிறைவாக நினைத்துக் குறைகளை மன்னிக்கவும் மறக்கவும் செய்யலாம். ஏதானாலும் உனக்காக நான், எனக்காக நீ, என்று வாழ்வாங்கு வாழலாம்.
நம் இதிகாச புராணங்கள் பல காதல் கதைகளைச் சொல்லுகின்றன. ஸ்ரீ ராமாயணத்தில் பட்டாபிஷேக காட்சி. பட்டாபிஷேகம் நல்லபடியாக நடந்தேறியது. எல்லோருக்கும் பரிசுகள் கொடுத்தாகிவிட்டது; அனுமனுக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்று சீதைக்கு அவா. இராமபிரானைப் பற்றிய செய்தி கொண்டு வந்து சீதையின் ஆருயிர் காத்த உத்தமன் அல்லவா அனுமன்? சிந்தனை வயப்பட்டவளாய் இராமனைப் பார்க்கிறாள் சீதை; இராமனும் கண்களாலேயே உத்திரவு கொடுக்கிறான். தன் கழுத்தில் இருந்த மணி மாலையைக்  கழற்றி அனுமனின் கையில் கொடுக்கிறாள் சீதை. பார்வையிலேயே ஒருவரையொருவர் புரிந்து கொள்ளும் பக்குவம் இராமனுக்கும் சீதைக்கும் இருந்தது.
மேலும் படிக்க: காதலர் தினம்

காதல் கதை – 1

Longest married couple

காதலுக்கு ஆரம்பம் உண்டு; முடிவு இல்லை என்று ஒரு விளம்பரத்தின் ‘பஞ்ச்’ வரிகள்.

இதற்கு உதாரணமாக வாழ்பவர்கள் திரு கரம், அவரது மனைவி திருமதி கதரி சந்த் இருவரும். நீண்ட காலமாக திருமண பந்தத்தில் இணைந்து வாழ்பவர்கள் என்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றிருப்பவர்கள்.

திரு கரம் அவர்களுக்கு 107 வயது, அவரது மனைவிக்கு 100 வயது. இந்த ஜோடிக்கு 8 குழந்தைகள்; 28 பேரன் பேத்திகள்! திருமணம் ஆகி 87 வருடங்கள் ஆகின்றன.

இவர்களின் வெற்றிகரமான திருமண வாழ்க்கையின் ரகசியம் என்ன? ‘கதரியை எப்படியாவது சிரிக்க வைத்துவிடுவேன். ஜோக்குகள் சொல்லி அவளை சிரிக்க வைப்பது எனக்குப் பிடித்தமான ஒன்று. என்னைப் பொறுத்தவரை ரொமான்ஸ் என்பது வேடிக்கையும், விளையாட்டுமாய் மனைவியை மகிழ்விப்பதுதான்!’ என்கிறார் திரு கரம்.

இவர்கள் சொல்லும் ரொமான்ஸ் ரகசியங்கள்:

எப்போதும் உண்மையாக இருப்பது: திருமண பந்தம் என்பது அதில் இணைந்த இருவரும் ஒருவர்  வாழ்க்கையை இன்னொருவருக்காக உண்மையாய் வாழ்வதுதான். மிகவும் கஷ்டமான சமயங்களிலும் ஒருவருக்கொருவர் உண்மையாக இருப்பது தான் திருமண பந்தத்தை வலுப்படுத்தும். இருவரும் பொய் சொல்லக் கூடாது. சிலசமயங்களில் ‘அக்கரைப் பச்சை’ என்று தோன்றினாலும் உண்மையில் அக்கரை பச்சையாக இருப்பதில்லை!

 

ஒருவர்மேல் ஒருவர் அக்கறை செலுத்துங்கள்: துணைவருடன் வாழ்நாள் முழுவதும் இருக்க விரும்பினால், ஒருவர்மேல் ஒருவர் அக்கறை கொள்ள வேண்டும். நல்ல நிலையில் இருக்கும்போதும் சரி, நிலைமை சற்று சரியும்போதும் சரி, ஒருவரையொருவர் நல்லபடியாகப் பார்த்துக் கொள்ளுங்கள். துணைவருக்காக சமைப்பது, அவரது கையைப் பிடித்துக் கொண்டு நடப்பது, அவர் மனமுடைந்து போகும்போது நல்ல துணையாக இருந்து அவருக்கு ஆறுதலாகத் தோள் கொடுப்பது என்று எல்லாவற்றிலும்  அக்கறையைக் காட்டுங்கள்.

துணைவரை அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள்:

யாரிடம் இல்லை குறை? உங்கள் துணைவரை அவரது நிறை குறையுடன் ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்குப் பிடிக்காததை சில சமயங்களில் செய்யக் கூடும். கண்டு கொள்ளாதீர்கள். பொறுத்துக் கொள்ளுங்கள். உங்களிடம் குறை இல்லையா? குளித்து விட்டு துணிமணிகளை அப்படியே போட்டு விட்டு வரலாம். உங்களுக்குப் பிடிக்காத பாட்டு உங்கள் துணைவருக்குப் பிடிக்கலாம்! அவரது குறைகளுடன் ஏற்றுக் கொள்ளப் பழகிக் கொள்ளுங்கள். அவரது குறைகளின் மேல் கோவம் வரலாம். பல ஆண்டுகள் திருமண பந்தத்தில் இருக்க வேண்டும் என்றால் இன்னொருவரின் குறையைப் பொருட்படுத்தாமல் இருக்கப் பழகுங்கள். அல்லது அக்குறையை விரும்பக் கற்றுக் கொள்ளுங்கள். அந்தக் குறையே அவருக்கு நிறைவைக் கொடுக்கிறது என்று நம்புங்கள்.

துணைவரின் வார்த்தைகளை காது கொடுத்துக் கேளுங்கள்: திருமண பந்தத்தில் மிக முக்கியமானது துணைவர் பேசும்போது உன்னிப்பாக கேட்டுக் கொள்வது. முக்கால்வாசி பிரச்னைகள் வருவது / வளர்வது துணைவர் பேசும்போது காது கொடுத்துக் கேட்காமையால் தான். பேப்பர் படித்துக் கொண்டே, தொலைக் காட்சியில் கண்களை வைத்துக் கொண்டே ‘ஊம்’ கொட்ட வேண்டாம். அலுவலகத்தில் மட்டுமே பிரச்னை வரும் என்றில்லை. வீட்டிலும் வரும். ஒருவர் பேசுவதை மற்றவர் காது கொடுத்துக் கேட்டாலே  பாதி சுமை குறைந்தாற்போல இருக்கும்.

சமூக, இன மத ஒழுக்கத்தைப் பின்பற்றுங்கள். உங்கள் மூலம் உங்கள் குழந்தைகளும் இவற்றின் பெருமைகளைத் தெரிந்து கொள்ளுவார்கள். உங்கள் வாழ்க்கைத் துணைவருக்கு மரியாதை கொடுங்கள்; அவர் மேல் அக்கறை கொள்ளுங்கள்; அவரது அன்பைப் போற்றுங்கள்; முழுமையாகக் காதலியுங்கள்; அவரது மதிப்பை உணருங்கள்.

உங்களைப் பிறர் எப்படி நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களோ அப்படியே உங்கள் மற்றவரையும் நடத்துங்கள்.

 

காதலர் தினம் – காதல் கதை 2

 

இசைப்பாவில் கேட்டு மகிழ: கண்டேன் கண்டேன்…….

 

 

செல்வ களஞ்சியமே – பகுதி 5