Category Archives: ஆரோக்கியம்

கூகுள் கண்ணாடியை அணிந்து அறுவை சிகிச்சை

google glasses

 

கூகுள் கண்ணாடியை அணிந்தபடி சென்னையைச் சேர்ந்த ஒரு டாக்டர் நாளை அறுவைச் சிகிச்சை செய்யவுள்ளார். இதை உலகம் முழுவதும் உள்ள மருத்துவ மாணவர்கள் நேரடியாக காணலாம். கூகுள் கிளாஸ் போட்டபடி ஒரு மருத்துவர் அறுவைச் சிகிச்சை செய்வது உலகிலேயே இதுவே முதல் முறையாகும். இதனால் டாக்டர் ராஜ்குமார் மேற்கொள்ளப் போகும் அறுவைச் சிகிச்சை மருத்துவ உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. டாக்டர் ராஜ்குமார் சென்னை லைப்லைன் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்.

 

எடைக் குறைப்பு அறுவைச் சிகிச்சை

 

இது ஒரு எடைக் குறைப்பு அறுவைச் சிகிச்சையாகும். இந்த அறுவைச் சிகிச்சையைத்தான் நாளை டாக்டர் ராஜ்குமார் மேற்கொள்ளவுள்ளார்.

 

நேரடி ஒளிபரப்பு

 

டாக்டர் ராஜ்குமார் மேற்கொள்ளவுள்ள இந்த அறுவைச் சிகிச்சையை கூகுள் கண்ணாடி மூலம் நேரடியாக ஒளிபரப்பவும் உள்ளன். உலகம் முழுவதும் உள்ள மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் இதை நேரில் பார்க்க முடியுமாம்.

 

புதிய புரட்சி

 

இதுகுறித்து டாக்டர் ராஜ்குமார் கூறுகையில், மருத்துவ உலகில் இது ஒரு புரட்சிகரமான விஷயம். இந்த கூகுள் கிளாஸ் அறுவைச் சிகிச்சையை செய்யும் முதல் இந்திய மருத்துவர் நான் என்பதில் நான் பெருமை கொள்கிறேன் என்றார்.

 

உலக மருத்துவர்கள் பார்க்கலாம்

 

மேலும் அவர் கூறுகையில், இந்த அறுவைச் சிகிச்சையை உலகம் முழுவதும் உள்ள மருத்துவர்கள் காண முடியும். முக்கியமான அறுவைச் சிகிச்சைகளை பல்வேறு நிபுணர்கள் இணைந்து நடத்த இது வழி வகுக்கும் என்றார் அவர். டெஸ்க் டாப், லேப்டாப் போல, அணிந்து கொள்ளும் கம்ப்யூட்டர் என்ற செல்லப் பெயர் கொண்டது இந்த கூகுள் கண்ணாடி என்பது குறிப்பிடத்தக்கது.

 

நன்றி:

Read more at: http://tamil.oneindia.in/news/tamilnadu/wearing-google-glasses-chennai-doctor-will-perform-major-surgery-183572.html#slide332320

சூப் சாப்பிடாதீங்க!

soup

 

எப்போது ஹோட்டலுக்குப் போனாலும் சூப் சாப்பிடுபவரா  நீங்கள்? இப்போதெல்லாம் விருந்துகளிலும் சூப் வைக்கப்படுகிறது. இதைதவிர இப்போது பலவகை தயார் நிலை சூப் பவுடர்கள் கிடைக்கின்றன. இவற்றை நீரில் கரைத்து அடுப்பில் கொதிக்க வைத்தால் சூப் ரெடி!

இந்த சூப் சாப்பிடுவதைப் பற்றி பிரபல ஸ்போர்ட்ஸ் நியூட்ரிஷியன்  ஷைனி சந்திரன் சொல்வதை கேளுங்கள்.

“சூப்’ பசியைத் தூண்டும். உடல் பருமனைக் குறைப்பதற்கு உதவும். ஆரோக்கியத்தைக் கூட்டும். இதற்காகத் தான் சூப் சாப்பிடும் வழக்கம் ஏற்பட்டது.

ஆனால், இன்றைக்கு பீச், பார்க் போன்று, மக்கள் அதிகம் கூடும் இடங்களில் விற்கப்படும், சூப், பசியைத் தூண்டுவதற்கு பதில், பசியை அடக்கி விடுகிறது.

ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு பதில், வேறு சில பிரச்னைகளையும் கொண்டு வருகிறது.

தினமும் சூப் பருகலாம் தவறில்லை.ஆனால், எப்போதும் வெளியிடங்களில், ரெகுலர் கஸ்டமராகப் பருகுவது ஆபத்து. இதிலிருந்து தப்பிப்பதற்கு ஒரே வழி, வீட்டிலேயே தயாரித்து சாப்பிடுவது தான்!சரி,

வீட்டில் தானே தயாரிக்க வேண்டும் என்று பலர்  ரெடிமேடாகக் கிடைக்கும் சூப் பவுடர்களைக் கொண்டு, வீட்டிலேயே சூப் தயாரிக்கின்றனர். அவசர வாழ்க்கையில், வீட்டிலேயே சூப் தயாரிக்க நேரம் இருக்காது என்பதால், இதைத் தவறு என்று சொல்ல முடியாது.

ஆனால், சூப் பவுடர்களைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

சூப் பவுடர்களில், சுவை கூட்டும் கெமிக்கல் கலக்கக் கூடாது என, “ரூல்ஸ்’ இருக்கிறது. ஆகவே, அதற்கு பதிலாக, சில பிராண்டுகளில், “மோனோ சோடியம் குளுடோமிட்’ கலந்திருக்கலாம்.

எனவே, சூப் பவுடர் பாக்கெட் வாங்கும் போது, அதில், மோனோ சோடியம் குளுடோமிட் கலந்திருப்பதாகக் குறிப்பிட்டிருந்தால், அதைத் தவிர்க்கலாம்.

சுவையாக இருக்கிறது என்று எல்லா சூப் வகைகளையும் ஒரு வெட்டு வெட்டக்கூடாது.

சுகர் பேஷண்டுகள், தக்காளி சூப் தவிர்க்க வேண்டியிருக்கலாம்.

சில சூப் வகைகள், உடல் உஷ்ணத்தைத் தூண்டுவதாக இருக்கும். இது மாதிரி அவரவர் உடல் நிலைக்கேற்ப, சூப் வகைகள் மாறுபடும்.

சூப் வகைகளை, காலை நேரங்களில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். மதியச் சாப்பாடு, மாலை டிபன் அதேபோல் இரவு சாப்பிடப் போவதற்கு பத்து, பதினைந்து நிமிடங்கள் முன்னதாக சூப் சாப்பிடுவது, “பெஸ்ட்!’

அடுத்தமுறை சூப் சாப்பிடும்போது கவனமாக இருங்கள்.

ஆரோக்கியத்திற்கு தேன் – இலவங்கப் பட்டை

“பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன்” என்றாள் அவ்வைப் பாட்டி.

தேன் ஒரு இயற்கை உணவு. அவ்வைப் பாட்டி காலத்திலிருந்தே தேன் ஒரு அரிய விஷயமாக எல்லோரும் அதனைப் பற்றி கட்டாயம் அறிய வேண்டிய விஷயமாக  இருந்திருக்கிறது. அக்காரணம் கொண்டே அவ்வைப் பாட்டி கடவுளுக்கு தேனை கொடுக்கிறேன் என்று சொல்லியிருக்கிறாள்.

தேன் நீண்ட நாட்களுக்குக் கெட்டுப் போகாதது. சில சமயங்களில் நீண்ட நாட்கள் உபயோகப் படாமல் இருந்தால் படிகங்கள் உருவாகி விடும். அப்போது தண்ணீரைக் கொதிக்க வைத்து தேன் பாட்டிலின் மூடியை சிறிது திறந்து விட்டு பாட்டிலை சூடு தண்ணீருக்குள் வைத்து விட்டு அடுப்பை அணைத்து விடவும். தேன் மறுபடி உருகி பழைய நிலைக்குத் திரும்பும். தேனை ஒருபோதும் கொதிக்க வைக்கக் கூடாது. மைக்ரோ வேவ் அவனிலும் வைக்கக் கூடாது. இப்படி செய்வது தேனில் இருக்கும் இயற்கையான உயிர் சத்தை கொன்று விடும்.

வெறும் தேன் மட்டுமல்லாமல் அதனுடன் இலவங்கப் பட்டை சேர்ப்பதால் பல நோய்கள் குணமாகும் என்று மருத்துவர்களும் அறிவியலாளர்களும் கூறுகிறார்கள். இந்தக் கலவை எந்தவிதமான பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது என்றும் சொல்லுகிறார்கள்.
தேனின் இயற்கையான இனிப்பு, சரியான அளவில் எடுத்துக் கொண்டால், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் கூட கெடுதல் செய்யாது.

இலவங்க பட்டையை நன்றாக பொடி செய்து வைத்துக் கொள்ளவும். தேன் ஒரு பாட்டில் வீட்டில் எப்போதும் இருக்கட்டும்.
இனி இவற்றை வைத்துக் கொண்டு என்ன என்ன நோய்களை சரி செய்யலாம் என்று பார்க்கலாம்:

இருதய நோய்:
தேன் மற்றும் இலவங்கப் பட்டை பொடி இரண்டையும் கலந்து பிரெட்டின் மேல் ஜாம்முக்கு பதில் தடவி உண்பதால் கொலஸ்ட்ரால் குறையும். இருதயத்தில் இருக்கும் தமனிகளில் இருக்கும் கொலஸ்ட்ராலைக்  குறைக்கும். ஏற்கனவே மாரடைப்பு  நோய் வந்தவர்களும் இதை சாப்பிடுவதால்  மறுபடி மாரடைப்பு ஏற்படுவதைத் தவிர்க்கலாம். . வயது ஏற ஏற நம் இருதயத்தின் தசைகள் வலுவிழந்து போகின்றன. தேனும் இலவங்கப் பட்டையும் இருதய தசைகளை வலுப் பெறச்செய்கின்றன. அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் சில மருத்துவ மனைகளில் சில நோயாளிகளுக்கு இந்த தேன், லவங்கப் பட்டை சேர்ந்த உணவைக் கொடுத்து ஆராய்ந்ததில் இம்முடிவு தெரிந்தது.

மூட்டு நோய்:
மூட்டு நோய் உள்ளவர்கள் காலை, மாலை இருவேளைகளிலும் ஒரு டம்ளர் சூடான தண்ணீரில் இரண்டு டீஸ்பூன் தேனும் ஒரு சிறிய ஸ்பூன் இலவங்கப் பட்டைப் பொடியும் கலந்து சாப்பிடலாம். தொடர்ந்து சாப்பிட மூட்டு நோய் குணமாகும்.

சிறுநீர் பை தொற்று நோய்:
சற்று வெது வெதுப்பான நீரில் இரண்டு மேசைக் கரண்டி இலவங்கப் பட்டை பொடி, ஒரு டீஸ்பூன் தேன் கலந்து சாப்பிட நோய் கிருமிகள் அழியும்.

கொலஸ்ட்ரால்:
16 அவுன்ஸ் டீ தண்ணீருடன் 2 மேசைக் கரண்டி தேனும், 3 டீஸ்பூன் இலவங்கப் பட்டை பொடியும் சேர்த்து சாப்பிட கொலஸ்ட்ரால் அளவு இறங்கிவிடும். தொடர்ந்து சாப்பிட நல்ல பலன் தெரியும். சுத்தமான தேன் தினமும் உணவுடன் சாப்பிட கொலஸ்ட்ரால் மூலம் வரும் தொந்திரவுகள் குறையும்.

ஜலதோஷம்:
ஒரு மேசைக் கரண்டி தேனை சுடு நீரில் வைத்து சிறிது வெதுவெதுப்பாக்கி அதனுடன் இலவங்கப் பட்டை பொடியை சேர்த்து மூன்று நாளைக்கு சாப்பிட கடுமையான ஜலதோஷம், இருமல், சைனஸ் தொல்லைகள் மறையும்.

வயிற்றுத் தொல்லை:
வயிற்று வலி, வயிற்றுப் புண்ணுக்கு தேனும் இலவங்க பட்டை பொடியும் மிகச் சிறந்த மருந்து.

வாயுத் தொல்லை:
ஜப்பான் நாட்டில் நடந்த ஆய்வு மூலம் இலவங்க பட்டை பொடியை தேனுடன் குழைத்து  சாப்பிட வாயுத் தொல்லை தீரும் எனத் தெரிய வந்துள்ளது.

நோய் எதிர்ப்பு சக்தி:
தினசரி தேனையும் இலவங்கப் பட்டைப் பொடியையும் சாப்பிடுவது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மேலும் நம் உடலை வைரஸ் தாக்குதலில் இருந்தும் காக்கும்.

அஜீரணக் கோளாறு:
இரண்டு மேசைக் கரண்டி தேனை எடுத்து அதன் மேல் சிறிது இலவங்கப் பட்டைப் பொடியைத் தூவி சாப்பாட்டுக்கு முன்னால் சாப்பிட்டால் அஜீரணக் கோளாறும், அசிடிடியும் குறையும். ஜீரணிக்க கடினமாக இருக்கும் உணவினை சாப்பிட்டவுடன் இந்தப் பொடியை தேனுடன் சாப்பிடுவது ஜீரணத்தை தூண்டி கடினமான உணவை ஜீரணிக்க உதவும்.

ஃப்ளு ஜுரம்:
இந்த ஜுரத்தை உண்டு பண்ணும் கிருமிகளை தேனின் இயற்கைத் தன்மை அழித்து விடுகிறது.

நீண்ட ஆயுளுக்கு:
ஒரு ஸ்பூன் இலவங்கப் பட்டை பொடியை மூன்று கப் நீரில் போட்டு கொதிக்க விடவும். அதனுடன் நான்கு டீஸ்பூன் தேன் சேர்த்து டீ செய்யவும். கால் கப் வீதம் மூன்று அல்லது நான்கு முறை குடிக்கவும். சருமத்தை இளமையாகவும் மென்மையாகவும் வைப்பதுடன், வயதாவதையும் தடுக்கிறது. இளமையிலேயே இந்த மாதிரி டீ பண்ணிக் குடித்து வந்தால், நூறு வயதுவரை கூட வாழலாம்.

முகப் பருக்கள்:
3 மேசைக் கரண்டி தேனுடன் ஒரு டீஸ்பூன் இலவங்கப்பட்டை பொடியை குழைத்து பேஸ்ட் செய்யவும். இதப் பேஸ்ட்டை முகப் பருக்களின் மேல் நேரடியாக இரவு படுக்கப் போகுமுன் பூசவும். காலையில் எழுந்திருந்து வெதுவெதுப்பான நீரினால் முகத்தை அலம்பவும். தினசரி தொடர்ந்து செய்து வர முகப் பருக்கள் அடியோடு மறையும்.

சரும தொற்றுநோய்கள்:
தேனையும் இலவங்கப் பட்டை பொடியையும் சம அளவில் எடுத்து குழைத்து சொறி, சிரங்கு படை முதலியவற்றின் மேல் போட இவை மறைந்து விடும். தழும்பு கூட ஏற்படாது.

உடல் இளைக்க:
ஒரு கப் தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் தேன் மற்றும் இலவங்கப் பட்டைப் பொடியைப் போட்டு காலை உணவிற்கு முன்னும், இரவு தூங்கப் போவதற்கு முன்னும் குடிக்கவும். இந்தக் கலவையைக் குடிப்பதால் உடலில் இருக்கும் அதிகப்படி கொழுப்பு கரைவதுடன், மேலும் கொழுப்பு சேராமலும் இருக்கும். மிகவும் பருமனான உடல் இருப்பவர்கள் கூட தங்கள் எடையை குறைக்கலாம்.

புற்று நோய்:
சமீபத்தில் ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவிலும் நடந்த ஆராய்ச்சியில் வயிறு, எலும்பு இவற்றில் உண்டாகும் புற்று நோய் முற்றிய நிலையில் இருந்தாலும் கூட இந்த இரண்டு பொருட்களின் கலவையால் சரி செய்யலாம் என்று தெரிய வந்திருக்கிறது. ஒரு மேசை கரண்டி தேன், ஒரு டீஸ்பூன் இலவங்கப் பட்டை பொடி கலந்து தினமும் மூன்று வேளை என்று ஒரு மாதத்திற்கு சாப்பிட வேண்டும்.

மிதமிஞ்சிய அசதி:
தேனில் இயற்கையாய் இருக்கும் இனிப்பு, நம் உடலுக்கு பலத்தைக் கொடுக்கிறது. இந்த இனிப்பு நம் உடலுக்குத் தீங்கிழைப்பதில்லை. வயதானவர்கள் தேன், இலவங்கப் பட்டை பொடி இரண்டையும் சம அளவில் எடுத்து தினமும் சாப்பிடுவதால், உடலாலும் மனதாலும் மிகவும் சுறு சுறுப்பாக இருப்பார்கள்.  வயதானவர்களுக்கு மதியம் ஒருவித அயர்ச்சி ஏற்படும். பலவீனமாக உணர்வார்கள். அப்போது ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு மேசைக் கரண்டி தேன் சேர்த்து, அதி சிறிதளவு இலவங்கப் பட்டை தூவி, காலை பல் தேய்த்தபின்னும் மதியம் மூன்று மணி அளவிலும் குடித்துவர, அலாதியான தெம்புடன் நடமாடுவார்கள். ஒரே வாரத்தில் அசதி நீங்கி புத்துணர்வு பெறுவார்கள்.

வாய் துர் நாற்றத்திற்கு : ஒரு டம்ளர் சுடு நீரில் ஒரு டீஸ்பூன் தேன், சிறிது இலவங்கப் பட்டை பொடி போட்டு வாய் கொப்பளித்து வர துர் நாற்றம் விலகும்.

காது கேளாமை: தேனையும் இலவங்கப் பட்டைப் பொடியையும் சம அளவில் எடுத்து காலை, இரவு வேளைகளில் தினமும் சாப்பிட்டு வர காது கேளாமை நீங்கும்.

இயற்கையுடன் இயைந்து வாழும்போதும், இயற்கை மருந்துகளை பயன்படுத்தும்போதும் நம் நோய்கள் தானாகவே அகன்று விடுகின்றன.

வீட்டு வைத்தியம் – பகுதி 1

வீட்டு வைத்தியம் பகுதி 2