படம் உதவி, நன்றி: கூகிள்
போனவாரம் உறவினர் ஒருவரின் வீட்டிற்குச் சென்றிருந்தோம். இரண்டு குழந்தைகளுக்குத் தாய் அந்தப் பெண். ஒரு ஆண், ஒரு பெண் என்று நான்கு வயதிலும் 2 வயதிலுமாக இரண்டு குழந்தைகள். என்னை மிகவும் கவர்ந்தது அந்த இரண்டாவது குழந்தை – பெண் குழந்தை. ஏற்கனவே பார்த்திருந்ததால் தயக்கம் இல்லாமல் என்னிடம் வந்தது. சென்ற முறை பார்த்திருந்த போது அதற்கு ஒரு பாட்டு –
‘பரங்கிக்காய பறிச்சு
பட்டையெல்லாம் சீவி,
பொடிப்பொடியா நறுக்கி,
உப்பு காரம் போட்டு
இம்(ன்)பமாகத் திம்(ன்)போம்.
இன்னும் கொஞ்சம் கேட்போம்,
குடுத்தா சிரிப்போம்;
குடுக்காட்டி அழுவோம்!’
– அபிநயத்துடன் சொல்லிக் கொடுத்திருந்தேன். என்னைப் பார்த்தவுடன் முகம் மலர்ந்து தனது சின்னக்கைகளால் அந்த பாட்டிற்கு அபிநயம் செய்ய ஆரம்பித்தது. அப்படியே அந்தக் குழந்தையை அணைத்துக்கொண்டேன். அது இப்போது புதிதாக ஒருபாட்டைப் பாடக் கற்றுக்கொண்டுள்ளது. ‘முத்தான முத்தல்லவோ’ என்ற பாட்டு.
மழலையில் அது பாடும்போது வார்த்தைகள் சரியாகக் கேட்கவில்லை. ‘ல்லோ….ல்லோ’ மட்டும் நன்றாகக் கேட்டது. குழந்தையின் குரலில் பிடிக்காத பாட்டும் பிடித்ததாயிற்று. தேன் போல இனிக்கும் குரலில் வார்த்தைகளை முழுங்கி முழுங்கி, வாயில் ஜொள்ளு வழிய அது பாடியது ‘குழலினிது யாழினிது’ என்ற குறளை நினைவிற்குக் கொண்டு வந்தது.
துளிக்கூட தயக்கம் இல்லாமல் எல்லோருடன் பழகியது. வாய் ஏதோ ஒரு பாட்டை பொரிந்து கொண்டே இருந்தது. ஏ,பி,ஸி,டி., பாபா ப்ளாக் ஷீப், என்று வீட்டைச் சுற்றிச்சுற்றி பாடியபடியே வளைய…
View original post 508 more words