இசை வணக்கம். விஜயதசமி நல்வாழ்த்துக்கள்.
எங்கள் ஊரில் (பெங்களூர்) வருடாவருடம் ஸ்ரீராம நவமி கச்சேரிகள் நடக்கும். ஃபோர்ட் ஹை ஸ்கூல் மைதானத்தில் – ஒரு நாள் இரண்டு நாட்கள் இல்லை; ஒரு மாதம் – ஒன்றரை மாதம் தினமும் காலை, பிற்பகல், சாயங்காலம் என்று மூன்று வேளை.
நமக்கு தமிழ் வருடம் பிறப்பதற்கு முன் இங்கு யுகாதி பிறந்துவிடும். அதேபோல ஸ்ரீராம நவமியும் முன்னாலேயே வந்துவிடும். எங்களவர் எனக்கு பாஸ் வாங்கிக் கொடுத்துவிடுவார். நம் ஊர் பிரபலங்கள் எல்லோரும் இங்கு வருவார்கள். எனக்கு மிகவும் பிடித்த திருமதி சுதா ரகுநாதனின்கச்சேரியை தவறவே விடமாட்டேன். இன்னொன்று விஷயமும் நடக்கும். ஒரு கச்சேரிக்கு வருபவர்கள் அடுத்தடுத்த நாட்களில் வேறு வேறு இடங்களில் பாடுவார்கள். நான் திருமதி சுதாவை விடாமல் அவர் எங்கு பாடுகிறார் என்று செய்தித்தாள் மூலம் தெரிந்து கொண்டு தொடருவேன்.
தொடர்ந்து படிக்க, கண்டநாள் முதலாய் பாடலைக் கேட்க: இசைப்பா