Monthly Archives: செப்ரெம்பர் 2013

கூகுள் கண்ணாடியை அணிந்து அறுவை சிகிச்சை

google glasses

 

கூகுள் கண்ணாடியை அணிந்தபடி சென்னையைச் சேர்ந்த ஒரு டாக்டர் நாளை அறுவைச் சிகிச்சை செய்யவுள்ளார். இதை உலகம் முழுவதும் உள்ள மருத்துவ மாணவர்கள் நேரடியாக காணலாம். கூகுள் கிளாஸ் போட்டபடி ஒரு மருத்துவர் அறுவைச் சிகிச்சை செய்வது உலகிலேயே இதுவே முதல் முறையாகும். இதனால் டாக்டர் ராஜ்குமார் மேற்கொள்ளப் போகும் அறுவைச் சிகிச்சை மருத்துவ உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. டாக்டர் ராஜ்குமார் சென்னை லைப்லைன் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்.

 

எடைக் குறைப்பு அறுவைச் சிகிச்சை

 

இது ஒரு எடைக் குறைப்பு அறுவைச் சிகிச்சையாகும். இந்த அறுவைச் சிகிச்சையைத்தான் நாளை டாக்டர் ராஜ்குமார் மேற்கொள்ளவுள்ளார்.

 

நேரடி ஒளிபரப்பு

 

டாக்டர் ராஜ்குமார் மேற்கொள்ளவுள்ள இந்த அறுவைச் சிகிச்சையை கூகுள் கண்ணாடி மூலம் நேரடியாக ஒளிபரப்பவும் உள்ளன். உலகம் முழுவதும் உள்ள மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் இதை நேரில் பார்க்க முடியுமாம்.

 

புதிய புரட்சி

 

இதுகுறித்து டாக்டர் ராஜ்குமார் கூறுகையில், மருத்துவ உலகில் இது ஒரு புரட்சிகரமான விஷயம். இந்த கூகுள் கிளாஸ் அறுவைச் சிகிச்சையை செய்யும் முதல் இந்திய மருத்துவர் நான் என்பதில் நான் பெருமை கொள்கிறேன் என்றார்.

 

உலக மருத்துவர்கள் பார்க்கலாம்

 

மேலும் அவர் கூறுகையில், இந்த அறுவைச் சிகிச்சையை உலகம் முழுவதும் உள்ள மருத்துவர்கள் காண முடியும். முக்கியமான அறுவைச் சிகிச்சைகளை பல்வேறு நிபுணர்கள் இணைந்து நடத்த இது வழி வகுக்கும் என்றார் அவர். டெஸ்க் டாப், லேப்டாப் போல, அணிந்து கொள்ளும் கம்ப்யூட்டர் என்ற செல்லப் பெயர் கொண்டது இந்த கூகுள் கண்ணாடி என்பது குறிப்பிடத்தக்கது.

 

நன்றி:

Read more at: http://tamil.oneindia.in/news/tamilnadu/wearing-google-glasses-chennai-doctor-will-perform-major-surgery-183572.html#slide332320

ஐயையோ ஆதார்!

pizza

 

வருடம் 2020

இடம் –  பீட்ஸா ஹட்

‘கிர்ர்ர்ரர்ர்ர்ரிங்……. கிர்ர்ர்ரர்ர்ர்ரிங்…….’

விடாமல் அடிக்கும் தொலைபேசியை எடுக்கிறார் அங்கிருக்கும் பெண்மணி.

பெ: ஹலோ…. பீட்ஸா ஹட்..!

வாடிக்கையாளர்: பீட்ஸா வேண்டும் …

பெ: பன்முறை பயன்பாட்டு ஆதார் அட்டையின் எண் கொடுங்கள், ஸார்.

வா: ஒரு நிமிடம் ….ஆங்…….என்னுடைய எண்:8898135102049998-45-54610

பெ: ஓகே ஸார். உங்கள் பெயர் மிஸ்டர் ஐயர். பெங்களூர் பனஷங்கரியிலிருந்து கூப்பிடுகிறீர்கள். வீட்டுத் தொலைபேசி எண்:…….அலுவலக எண்:… கைபேசி எண்:….. இப்போது வீட்டுத் தொலைபேசியிலிருந்து கூப்பிடுகிறீர்கள்.

வா: அட! ஆச்சரியமாயிருக்கே! எப்படி எனது எல்லா தொலைபேசி எண்களும் கிடைத்தன?

பெ: உங்கள் ஆதார் அட்டை எங்கள் கணனியின் தொடர்பில்  இருக்கிறது  ஸார்!

வா: ஓ! அப்படியா? குட்! இப்போது எனக்கு Seafood pizza வேண்டும்.

பெ: உங்களுக்கு இந்த பீட்ஸா சரிப்படாது, ஸார்!

வா: எப்படிச் சொல்லுகிறீர்கள்?

பெ: உங்களின் மருத்துவ அறிக்கைப்படி உங்களுக்கு மிக உயர் இரத்த அழுத்தம், உயர் கொழுப்பு அளவு இருக்கிறது.

வா: வேறு என்ன சிபாரிசு செய்கிறீர்கள்?

பெ: எங்களது ‘குறைந்த கொழுப்பு ஹாகீன் மீ’ பீட்ஸா  சாப்பிட்டுப் பாருங்கள். உங்களுக்குப் பிடிக்கும்.

வா: அதெப்படி நிச்சயமாகச் சொல்லுகிறீர்கள்?

பெ: நேற்று நீங்கள் தேசிய நூலகத்திலிருந்து ‘குறைந்த கொழுப்பு சத்து கொண்ட ஹாகீன் மீ உணவுப்பொருட்கள் செய்வது எப்படி?’ என்ற புத்தகத்தை கடன் வாங்கிக் கொண்டு வந்திருக்கிறீர்கள்!

வா: அதுவும் தெரிந்துவிட்டதா? சரி ஃபேமிலி சைஸ் பீட்ஸா மூன்று கொடுங்கள்.

பெ: 10 பேர்கள் கொண்ட உங்கள் குடும்பத்திற்கு இந்த அளவு சரியாக இருக்கும் ஸார்! உங்கள் பில் தொகை ரூ. 2450/-

வா: கிரெடிட் கார்டில் பணம் கொடுக்கலாமா?

பெ: மன்னிக்கவும் ஸார். உங்கள் கடன் அட்டையில் அளவுக்கு அதிகமாக தொகை  எடுத்திருக்கிறீர்கள். போன அக்டோபர் மாதத்திலிருந்து சுமார் ரூ. 1,51,758/- பாக்கி வைத்திருக்கிறீர்கள்  –  கடன் கட்டத் தவறியதற்கான  தாமதத்தொகையை சேர்க்காமல்!

வா: ஓ! அப்போ பக்கத்திலிருக்கும் ATM போய் பணம் வாங்கி வருகிறேன்.

பெ: அதுவும் சாத்தியமில்லை, ஸார்! உங்களது  கணக்கு அறிக்கைப்படி, நீங்கள் இனிமேல் ATM-இல்  பணம் எடுக்க முடியாது. அங்கும் அதிகப்படியான பணத்தை எடுத்துவிட்டீர்கள்.

வா: பரவாயில்லை. பீட்ஸாக்களை அனுப்புங்கள். என்னிடம் பணம் இருக்கிறது. எத்தனை நேரம் ஆகும்?

பெ:45 நிமிடங்கள் ஆகும் ஸார். நீங்கள் வேண்டுமானால் உங்கள் மோட்டார் சைக்கிளில் வந்து பெற்றுக் கொண்டு போகலாம்.

வா: (அதிர்ச்சியாக) என்ன! மோட்டார் சைக்கிளா?

பெ: எங்களிடம் இருக்கும் விவரங்களின்படி உங்களிடம் 1123 என்ற எண்ணுள்ள மோட்டார் சைக்கிள் இருக்கிறது, ஸார்!

வா: ??????(ம்ம்ம்ம்ம்ம்ம் …இவங்களுக்கு என் மோட்டார் சைக்கிள் நம்பர் கூடத் தெரியமா?)

பெ: வேறு ஏதாவது வேண்டுமா ஸார்?

வா: ஒன்றுமில்லை…. இந்த பீட்ஸாக்களுடன் இலவசமாக  3 கோலா பாட்டில்கள் அனுப்பிவிடுவீர்கள், இல்லையா?

பெ: வழக்கமாக எல்லோருக்கும் அனுப்புவோம். ஆனால் உங்களுக்கு சர்க்கரை நோய் இருப்பதால், உங்கள் ஆரோக்கியத்தை மனதில் வைத்துக் கொண்டு அனுப்ப இயலாது ஸார்!

வாடிக்கையாளர் கோவம் தலைக்கேற கன்னாபின்னா வென்று திட்டுகிறார்.

பெ: உங்களை எச்சரிக்கிறேன் ஸார்!  2007 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி ஒரு காவல்துறை அதிகாரியை இதேபோல கன்னாபின்னாவென்று பேசியதற்காக 2 மாதங்கள் சிறை வாசத்துடன் ரூ 5000/- அபராதம் கட்டினீர்கள். மறக்க வேண்டாம்!

 

வாடிக்கையாளர் மயங்கி விழுகிறார்!

 

இந்தியா முன்னேற்றப்பாதையில்…….!

சூப் சாப்பிடாதீங்க!

soup

 

எப்போது ஹோட்டலுக்குப் போனாலும் சூப் சாப்பிடுபவரா  நீங்கள்? இப்போதெல்லாம் விருந்துகளிலும் சூப் வைக்கப்படுகிறது. இதைதவிர இப்போது பலவகை தயார் நிலை சூப் பவுடர்கள் கிடைக்கின்றன. இவற்றை நீரில் கரைத்து அடுப்பில் கொதிக்க வைத்தால் சூப் ரெடி!

இந்த சூப் சாப்பிடுவதைப் பற்றி பிரபல ஸ்போர்ட்ஸ் நியூட்ரிஷியன்  ஷைனி சந்திரன் சொல்வதை கேளுங்கள்.

“சூப்’ பசியைத் தூண்டும். உடல் பருமனைக் குறைப்பதற்கு உதவும். ஆரோக்கியத்தைக் கூட்டும். இதற்காகத் தான் சூப் சாப்பிடும் வழக்கம் ஏற்பட்டது.

ஆனால், இன்றைக்கு பீச், பார்க் போன்று, மக்கள் அதிகம் கூடும் இடங்களில் விற்கப்படும், சூப், பசியைத் தூண்டுவதற்கு பதில், பசியை அடக்கி விடுகிறது.

ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு பதில், வேறு சில பிரச்னைகளையும் கொண்டு வருகிறது.

தினமும் சூப் பருகலாம் தவறில்லை.ஆனால், எப்போதும் வெளியிடங்களில், ரெகுலர் கஸ்டமராகப் பருகுவது ஆபத்து. இதிலிருந்து தப்பிப்பதற்கு ஒரே வழி, வீட்டிலேயே தயாரித்து சாப்பிடுவது தான்!சரி,

வீட்டில் தானே தயாரிக்க வேண்டும் என்று பலர்  ரெடிமேடாகக் கிடைக்கும் சூப் பவுடர்களைக் கொண்டு, வீட்டிலேயே சூப் தயாரிக்கின்றனர். அவசர வாழ்க்கையில், வீட்டிலேயே சூப் தயாரிக்க நேரம் இருக்காது என்பதால், இதைத் தவறு என்று சொல்ல முடியாது.

ஆனால், சூப் பவுடர்களைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

சூப் பவுடர்களில், சுவை கூட்டும் கெமிக்கல் கலக்கக் கூடாது என, “ரூல்ஸ்’ இருக்கிறது. ஆகவே, அதற்கு பதிலாக, சில பிராண்டுகளில், “மோனோ சோடியம் குளுடோமிட்’ கலந்திருக்கலாம்.

எனவே, சூப் பவுடர் பாக்கெட் வாங்கும் போது, அதில், மோனோ சோடியம் குளுடோமிட் கலந்திருப்பதாகக் குறிப்பிட்டிருந்தால், அதைத் தவிர்க்கலாம்.

சுவையாக இருக்கிறது என்று எல்லா சூப் வகைகளையும் ஒரு வெட்டு வெட்டக்கூடாது.

சுகர் பேஷண்டுகள், தக்காளி சூப் தவிர்க்க வேண்டியிருக்கலாம்.

சில சூப் வகைகள், உடல் உஷ்ணத்தைத் தூண்டுவதாக இருக்கும். இது மாதிரி அவரவர் உடல் நிலைக்கேற்ப, சூப் வகைகள் மாறுபடும்.

சூப் வகைகளை, காலை நேரங்களில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். மதியச் சாப்பாடு, மாலை டிபன் அதேபோல் இரவு சாப்பிடப் போவதற்கு பத்து, பதினைந்து நிமிடங்கள் முன்னதாக சூப் சாப்பிடுவது, “பெஸ்ட்!’

அடுத்தமுறை சூப் சாப்பிடும்போது கவனமாக இருங்கள்.