Monthly Archives: ஏப்ரல் 2013

பூமி தினம் (Earth Day)

ranjani narayanan

பூமி தினம் (Earth Day)
ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 22 ஆம் நாள் பூமி தினமாக அனுசரிக்கப்படுகிறது. எதற்காக நாம் வாழும் இந்த பூமிக்குத் தனியாக ஒரு நாள் ஒதுக்க வேண்டும்? பல காரணங்கள். அடுக்கிக்கொண்டே போகலாம்.
முதல் காரணம்: நாம் எல்லா வளங்களும் நிறைந்த இந்த பூமியில் பிறந்திருக்கிறோம். இதற்காக பூமித்தாய்க்கு நன்றி கூற.
இரண்டாவது காரணம்:
இந்த நிலவுலகை சுமார் 2 மில்லியன் மனிதரல்லாத உயிரினங்களுடன் பகிர்ந்து கொண்டு வாழுகிறோம். இன்னும் புதுப்புது உயிரினங்கள் கண்டுபிடிக்கப் பட்டு வருகின்றன. ஒவ்வொரு வருடமும் கிட்டத்தட்ட 140,000 உயிரினங்கள் அழிந்து போக நாம் காரணம் ஆகிறோம். இதற்காக பூமித்தாயிடம் மன்னிப்புக் கேட்க!
இது மனித இனம் மேலாதிக்கம் செலுத்தும் சகாப்தம். அதனால் சில விஞ்ஞானிகள் இந்த சகாப்தத்தை மனித சகாப்தம் (Anthropogenic) என்றே குறிப்பிடுகிறார்கள். அதனால் இப்போது நடக்கும் நல்லது கெட்டது இரண்டுக்குமே நாம்தான் காரணம்.
ஏன் உயிரினங்கள் அழிந்து போயின? மனித இனப்பெருக்கம் தான் காரணம். 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஒன்றரை பில்லியன் ஆக இருந்த உலக மக்கள் தொகை இப்போது 7 பில்லியன் ஆக உயர்ந்திருக்கிறது. மக்கள் பெருக்க விகிதம் குறைந்திருந்தாலும் 2050 ஆம் ஆண்டு உலகின் மக்கள் தொகை 9 பில்லியனைத் தொட்டுவிடும் என்று எதிர்பார்க்க படுகிறது.
மக்கள் இனப் பெருக்கம் உணவுப் பெருக்கத்திற்கு வழி வகுத்தது. உணவுத் தேவையை பூர்த்தி செய்ய காடுகள் அழிக்கப்பட்டு விளைநிலங்கள்…

View original post 330 more words